Sunday, 19th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: மழை வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வருண ஜப நிகழ்வில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் கஜா புயல் வீசிய பொழுது பெய்த மழைக்குப் பிறகு மழை அரவே பெய்ய வில்லை. இதனால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் பருவ மழை பெய்ய வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில்வருணஜபம் நடைபெற்றது.
இதில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் நகரச் செயலாளர் ராம ராமநாதன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.